பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வரைந்த ஓவியம் மறைந்ததே!

1969 சனவரித்திங்கள் இரண்டாம் வாரம் ஒரு நாள் இரவு அண்ணா வீட்டிலிருந்தேன். அண்ணியார் அண்ணா வுக்கு ஒரு கிளாஸ் தம்ளரில் அரிசிக்கஞ்சி கொடுத்தார்கள். இரவு உணவு ஒருவாய் உட்செலுத்திய அண்ணா, முகத்தைச் சுளித்தவராய், என்ன ராணி இது! பாத்துத் தரக்கூடாதா? இந்தக் கஞ்சியிலே பார்! ஒரு சாதம் முழுசாக் கிடக்குது!” என்றார் பரிதாபக் குரலில். “ஒரு பருக்கை சோறு கூட இல்லாமெ (liquid) லிக்விடாகத்தான் சாப்பிடச் சொல்லியிருக்காரா டாக்டர்?” என்று கேட்டேன் அண்ணாவிடம் அப்பாவித்தனமாக. “அதில்லய்யா. சோறு தொண்டையிலே உறுத்துது, இறங்கமாட்டேங்குது!” என்று அண்ணா சொல்லிய பிறகே, அந்நோயின் கொடுரத்தன்மை எனக்குப் புரிந்தது! “அது மட்டும் இல்லே. இப்ப வயிற்றுக் கோளாறும் இருக்குது. அடிக்கடி lose motion போகுது” என்றார். “அப்படியானால் இந்த Capsule சாப்பிடலாம் அண்ணா!” என்று சொல்லி, என் சட்டைப் பையில் எப்போதும் வைத்திருக்கும் Chlorostep எடுத்துத் தந்தேன். “இதெல்லாம் இப்ப எடுபடுமா? விஷயமே வேறெ அய்யா!” என்றார்கள் அண்ணா. கலைஞரும், மற்றும் எதிரிலிருந்தவர்களும், அண்ணாவுக்குத் தெரியாமல் எங்கள் கண்ணிரைத் துடைத்துக் கொண்டோம்! அமைச்சர் கோவிந்தசாமி இல்லத்தில் அண்ணாவுக்காகக் குளிர்சாதன வசதி செய்து அங்கு குடியேறச் சொன்ன மருத்துவர்களின் வேண்டுகோளையும் தம்பிமார்களின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டுக் கடைசிவரை சொந்த வீட்டில் வாழும் கொள்கை யைக் காப்பாற்றினாரே நம் அண்ணா!

என் குடும்பத்தில் பொங்கல் விழா மட்டும் கொண்டாடு வோம். 1969-ஆம் ஆண்டு, நான் குடும்பத்தோடு சென்னை