பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

அண்ணா—சில நினைவுகள்

குயில் பறந்து விட்டது. நாதம் நிலைத்திருக்கிறது
மலர் உதிர்ந்து விட்டது, மணம் கிரம்பி இருக்கிறது.
அஞ்சுகம் மறைந்து விட்டார்கள்
அவர்கள் பற்றிய கினைவு கிலைத்திருக்கிறது."

இதே சந்தர்ப்பத்தில் தான் “முரசொலி”யில் எழுதிய கையறு நிலைக் கட்டுரையின் வரிகளிற் சில இங்கு பொருந்தக் கூடுமே.

“பெற்ற தாயிடத்தில் மட்டுமே பெறத்தக்க பரிவு, பாசம், அன்பு, அரவணைப்பு-ஆகியவற்றை மற்றொரு தாயிடத்திலும் பெற இயலும் என்பதற்கோர் இலக்கண மாய் வாழ்ந்துகாட்டிய அன்னையார், தன் குலக் கொழுந்துகள் குமுறியழுவதும் கேளாமல், ஒருமுறை பார்த்தோரும் உருகிக் குமையும் காட்சியைக் காணாமல் கண்மூடி விட்டார்கள்.

பொக்கைவாய் முழுதும் புன்சிரிப்பு நிறைய ‘வாங்க தம்பி!’ என்று வயதில் தன் பேரப் பிள்ளைகளை ஒத்தோரையும் மரியாதைப் பன்மையிலே விளித்து மனங்குளிர அழைத்து, வீட்டிலே குழந்தை குட்டிகள் சவுக்கியமா?’ எனவும் மறவாமல் வினவி, அதற்கும் அடுத்தபடியாகத் தாம் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்புவதற்குத்தான் என்ற கருத்தில் சாப்பிட வாருங்கள்’ என்ற உபசரிப்பை இனி என்றென் றும் காண ஒண்ணாத அவல நிலைக்கு ஆளானோம். சாப்பிட அமர்ந்ததும் தம் கையால் ஏதாவது பறிமாறினால்தான் திருப்தி ஏற்படும் அளவுக்கு நீர் நிறைந்த ஊருணிபோல் வற்றாத வாத்சல்யம் சுரக்கின்ற அந்த இனிய முகத்தை எப்படி மறக்க இயலுமோ?...

இயக்கத்துக்கு முதல்வராம் அண்ணாவோ பிற முன்னணித் தலைவர்களோ வருகை தந்தால் அவர்களை