பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அண்ணா—சில நினைவுகள்


படித்து முடித்து விடைபெற்றுக் கிளம்பினேன். மாலையில் இதை எந்த ரேடியோவில் கேட்பது? அப்போ தெல்லாம் வீட்டுக்கு வீடு ஏது ரேடியோ? தஞ்சையில் திலகர் திடல்-திருச்சியில் இப்ராகிம் பார்க்-இது போலப் பொது ரேடியோ மட்டுந்தான்! மேலப் புவி வார்ட் சாலை யில் நின்று, கேட்டேன்.

நேரம் போதாமல் கடைசிப் பகுதியை அண்ணா விரைவாகப் படிப்பது புரிந்தது. சிரித்துக் கொண்டே மன்னார்குடி செல்லத் திருச்சி ஜங்ஷன் நோக்கி நடந்தேன். எந்த நிகழ்ச்சிக்கும் தாமதமாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணா அவர்கள், என்னுடைய திருமணத்துக்காக, முதல் நாள் இரவே மன்னார்குடி வந்து தங்கிவிட்டார்.

அன்பர்களைத் தான் சோதனைக்கு உள்ளாக்குவார்களோ—தலைவர்கள்? ஆனால் இந்தச் சோதனையால் எனக்கு வேதனை ஏற்படவில்லை-அண்ணா முன்கூட்டி வந்து சிறப்பித்தது எனக்கு ஒரு சாதனையே!