பக்கம்:அண்ணா நாற்பது.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33 இருக்கின்றார் எங்கள் அண்ணா இளைஞர்நெஞ் சங்களிலே
இருக்கின்றார் எங்கள் அண்ணா இனிய தமிழ் உளங்களிலே
இருக்கின்றார் எங்கள் அண்ணா இயற்றியுள்ள நூற்களிலே
இருக்கின்றார் எங்கள் அண்ணா இப்பெருநா டெங்கணுமே!


34 அண்ணா நீ பிறந்த அதுதான் நல்லூராம்
அண்ணா நீவாழ்ந்த அதுவே நன்னாடாம்
அண்ணா நீ மறைந்த அஃதே நற்கோயில்
அண்ணா தொடர்புற்ற அனைத்தும் உயர்ந்தனவால்!


35 பல்லவர் தலைநக ராயமைத் தாண்டதால் பாரிற் சிறந்தது காஞ்சி
அல்லலில் கோயில் அறநிலை யங்களால் அன்பின் மிக்கது காஞ்சி
பல்வகைக் கலைகள் பரவிப் படர்ந்ததால் பண்பில் நிறைந்தது காஞ்சி
நல்லவர் அண்ணா நலனுறப் பிறந்ததால் நாட்டில் உயர்ந்தது காஞ்சி.


36 தம்பியர் உள்ளனர் தமிழ்மொழி காத்திடுவர் எனுந்தருக்கோ
தம்பியர் உள்ளனர் தமிழரினம் ஓம்பிடுவர் எனுஞ்செருக்கோ
தம்பியர் உள்ளனர் தமிழ்நாடு புரந்திடுவர் எனுங்குறிப்போ
நம்பிநீ எதனால் நானிலம்விட் டகன்றனையால் நவின்றிடுவாய்.


37 எத்தனையோ பணிகள்தமை யாரை நம்பி விட்டகன்றாய் எங்கள் அண்ணா
எத்தனையோ பொறுப்புகளை எங்களிடம் ஒப்படைத்தாய் எங்கள் அண்ணா

12