9. உருச்சிறிய அச்சாணி உருள்விக்கும் பெருந்தேரை
உருச்சிறிய ஊற்றங்கால் உண்பிக்கும் உலகோரை
உருச்சிறிய அணுப்பிளவே உண்டாக்கும் உயராற்றல்
உருக்குறிய நம்மண்ணா உயர்ந்துவிட்டார் இமயம்போல்!
10.அண்ணாவை வணங்க ஆருயிர்தந் தார்பலரால்
அண்ணாவை இறைஞ்ச அழிபசியுற் ருேர் பலரே
அண்ணாவை ஏத்த அருந்துயருற் ருேர்பலராம்
அண்ணாவின் மகிமை யாதென்றே அறிந்திலமே!
11. அரசியல் அறிஞர் என்கோ அந்தமிழ் அறிஞர் என்கோ
வரிசைசேர் ஓவி யத்தில் வரைந்திடு காவி யத்தில்
பரவுறு நாட கத்தில் பணிகளில் அறிஞர் என்கோ
விரவிய துறையில் எல்லாம் வியத்தகு அறிஞர் உண்மை!
12. எந்த உலகினில் இத்தனை தம்பியர்கள் இருப்பர் என்றேகினய்
எந்த உலகினில் இத்தனை ஆர்வலர்கள் இருப்பர் என்றுசென்றாய்
எந்த உலகினில் இத்தனை தொண்டர்கள் இருப்பர் என்றுபோனாய்
எந்த உலகினில் இத்தனை சிறப்புக்கள் எய்தலாம் என்றகன்றாய்.
13. செல்வம் நிலையாது சென்றிடும் இன்பம் என்றே
சொல்வது முற்றிலுமே சொந்தப் பட்டறி வினிலே
நல்ல தமிழர்கள் நன்ருய்க் கண்டு விட்டார்
செல்வமாம் அண்ணா சென்றே மறைந்து விட்டார்.