5
தால், விடுதலையால் என்ன பலன்? வேடனிடமிருந்து மீட்டுவந்த புள்ளிமானை, வேங்கையின் முன்பு துள்ளி விளையாட விடுவதா?
இதை எண்ணினால், நாடு விடுதலை பெற்றதும், நல்லாட்சி அமைக்கும் வழிவரை கூறி அந்தப் பொறுப்பை, உடனிருந்தோரிடம் தந்தார். மக்களை நல்லவர்களாக்கும் நற்பணி புரியலானார்.
நல்ல மனிதர்களெல்லாரும், திடீர் திடீரென்று பொல்லாத செயல்புரியக் கிளம்பியது கண்டார். மனம் மிக நொந்தார். மனிதனுக்குள் இருக்கும் மிருகம் வெளிப்படக்கண்டு, மிகவும் வேதனைப்பட்டார். இந்தச் சூழ்நிலையை மாற்றியாக வேண்டும் என்று தீர்மானித்துப், பணி புரியலானார். அந்த அரும்பணியாற்றுவாயிலேதான் அநியாயமாய்க் கொல்லப்பட்டார்.
நாட்டை மீட்க ஒரு ரணகளச் சூரரையும், நல்லாட்சி அமைக்க பல கலைவாணரையும் மக்களை நல்வழிப்படுத்த அறநெறி கூறுவோரையும் நாடியாக வேண்டும். எந்த நாட்டுக்கும் அனைவரும் ஏக காலத்தில் கிடைக்க மாட்டார்கள். ஒரு தலைமுறையிலே வீரன் தோன்றி விடுதலை தருவான். மற்றோர் தலைமுறையிலே நிபுணர் தோன்றி நல்லாட்சி அமைப்பார். பிறிதோர் சமயம் பேரறிஞர் தோன்றி மக்களுக்கு நல்வழி காட்டுவார்.
உத்தமர் காந்தியாரின் உள்ளம், இந்த மூன்று பண்புகளையும் ஏக காலத்தில் ஒன்றுக் கொன்று குறையாத அளவில் கொண்டு இருந்தது. மூன்று தலைமுறைகள், மூன்று தனித்தனித் தலைவர்கள் கொள்ள வேண்டிய குணத்தை, அவர் ஒருவர் கொண்டிருந்தார். உலக வரலாற்றிலே இதற்கு வேறு ஈடு கிடையாது.
விடுதலை வாங்கித்தந்தவர்கள் உண்டு-
போர்த்திறனால்!
நல்லாட்சி நிறுவியவர்கள் உண்டு-
அறிவின் மேம்பாட்டினால்:
மக்களை நல்லவர்களாக்கினவர்கள் உண்டு-
தூய்மையினால்.
மூன்று அரும் பணிகளையும் ஒரு சேரச் செய்த ஒப்பற்ற சிறப்பு, உத்தமர் காந்தியார் ஒருவருக்கேதான் உண்டு.
நாடு விடுதலை பெற, அன்னியருடன் போராட வேண்டி இருந்தது-செய்தார்; வெற்றி பெற்று நாட்டுக்குச் சிறப்பை வாங்கித் தந்தார்.