பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஔவையார் தூது

43

இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எங் கோமான் வைந்துதி வேலே.[1]

[இவைகளோ, மயிற்பீலியை அணிந்து, மாலை சூடடி, உருவம் திரண்ட வலிமையுடைய காம்பு அழகுறச் செய்து நெய் இடப்பெற்று, காவலையுடைய அகன்ற அரண்மனையில் இருக்கின்றன. அவையோ-எப்போதும் வளம் இருந்தால் வேண்டிய உணவுகளை வழங்கி, வளம் இல்லையானால் தான் உண்ணுவதைப் பகிர்ந்தளித்து உடனுண்ணும் ஏழைகளின் உறவினனும், தலைவனும், அண்ணலுமாகிய எம் கோமான் அதிகனுடைய கூரிய முனையையுடைய வேல்களோ-பகைவர்களைக்குத்திப் பக்கங்களும், நூனியும் சிதைந்து, கொல்லனுடைய உலைக்களமாகிய சிறிய இடத்தில் இருக்கின்றன. இவ்வே-இவை, பீலி - மயிற்பீலி. கண்- இடம்; இங்கே உருவம். நோன் காழ் - வலிய காம்பு. கடி - காவல். வியல் நகர - அகன்ற அரண்மனையில் உள்ளன. நகரவே என்பது நகரவ்வே என்று விகாரமாக நின்றது. அவ்வே - அவை. கோடு - பக்கம். நுதி-நுனி, கொல் துறை - கொல்லனுடைய உலைக்களமாகிய. குற்றில - குறிய இல்லில் உள்ளன. பதம் - உணவுப் பொருள். இல்லோர் - வறியவர்கள். ஒக்கல் - உறவினன். வை - கூர்மையான.]

தொண்டைமான் இதைக் கேட்டு மகிழ்ந்து போனான். ஔவையார் சில காலம் அங்கே தங்கி அதிகமானுடைய குணநலங்களையெல்லாம் தொண்டைமானுக்குச் சொன்னார். அத்தகைய அறிவுடைப் பெருமகளாருடைய மதிப்புக்குரியவனாக இருப்பதற்கு அதிகமானிடம் ஏதோ சிறப்பிருக்க வேண்டும் என்பது அம்மன்னனுக்குப் புலனாயிற்று. “அதிகமானுடைய நட்பு உங்களால் கிடைத்ததற்கு நான் மிக்க நன்றி பாராட்டுகிறேன்” என்று மனம் கனிந்து கூறினான்.