பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அதிகமான் நெடுமான் அஞ்சி


“வெளியே வந்தால் என்றல்லவா சொல்கிறாய்? அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா என்பதுபோல இருக்கிறதே!” என்று சேரன் கூறும்போது அவன் உள்ளத்தில் இருக்கும் பொருமல் வெளியாயிற்று.

“பிட்டங் கொற்றனார் கருத்து என்ன ?” என்று காரி கேட்டான்.

“பெரியவர்களாகிய நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன தெரியும்?”

“இல்லை, உன்னுடைய கருத்தைச் சொல் அப்பா” என்றான் சேரன்.

“நாம் இங்கே வந்து ஐந்தே நாட்கள் ஆயின. இது நீண்டகாலம் அன்று. இன்னும் சில நாட்கள் இப்படியே முற்றுகையை நடத்திக்கொண்டிருப்போம். எவ்வளவு காலம் அவர்கள் உள்ளே இருப்பார்கள் ?” என்றான் அவன்.

“மாதக் கணக்காக இருந்தால் என்ன செய்வது?” என்று நெடுங்கேரளன் கேட்டான்.

“இருக்கலாம். ஆனல் அவர்கள் பசியா வரம் பெற்றிருக்கவேண்டும். உள்ளே சில நாட்களுக்கே உரிய உணவைச் சேமித்து வைத்திருப்பார்கள். அது தீர்ந்ததென்றால் அதிகமான் கோட்டைக் கதவைத் திறக்கத்தானே வேண்டும்?” என்றான் பிட்டங் கொற்றன்.

பிட்டங் கொற்றன் கூறியது பொருளுடையதாகப் பட்டது சேரனுக்கு. “ஆம், அதுவும் ஒருவாறு கருதத் தக்கதுதான்” என்றான் மன்னன்.

“நம்மிடமும் ஓரளவுதானே உணவுப் பொருள்கள் இருக்கின்றன?” என்று ஒரு கேள்வி போட்டான் நெடுங்கேரளன். அவன் ஆண்டில் இளையவன்; மிக்க அனுபவம் இல்லாதவன்.

அரசன் சிரித்துக்கொண்டான். “உனக்கு உணவுப் பஞ்சம் வராது; நீ அஞ்சவேண்டாம். நாம்