பக்கம்:அதிசயப் பெண்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அதிசயப் பெண்



இந்தியாவில் இருந்தபோது இந்நாட்டைப் பற்றி அவன் ஒன்றும் தெரிந்துகொள்ளவில்லை. சீமைக்குப் போன பிறகு அங்கே ஏற்பட்ட நண்பர்களின் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் திண்டாடினான். இந்தியாவைப் பற்றிய சில புத்தகங்களைச் சீமையிலே படித்தான்

இந்தியா விவசாய நாடு என்று அந்தப் புத்தகங்களின் மூலம் தெரிந்துகொண்டான். பல காணிகளைப் படைத்த பணக்காரர்கள் சொந்த ஊரை விட்டு நகர வாழ்க்கையில் உள்ள மோகத்தால் வந்துவிடுகறார்கள். கிராமத்திலோ நிலங்களைக் கூலிக்காரர்களும் குத்தகைக் காரர்களும் பார்க்கிறார்கள். இதனால் நிலம் சீர்குன்றி வளம் மங்கிப் போகிறது” என்று யாரோ புண்ணியவான் எழுதியிருந்தார். இந்த வாக்கியம் செல்வக் கும ரன் உள்ளத்திலே தைத்தது. தன் தந்தையாரும் நகர வாழ்க்கையில் மோகம் கொண்டவரென்பதை உணர்ந்தான்.

ஒருவிதமாகச் சீமைப் படிப்பு முடிந்தது. தாய் நாட்டுக்குப் போனவுடன், முதல் வேலையாகக் கிராமம் சென்று, அங்கே சொந்தக்காரரை ஏமாற்றி வாழும் காரியஸ்தர்களின் அட்டூழியங்களைக் கண்டு பிடிப்பது என்ற உறுதியை மேற்கொண்டான். தாய்நாடு வந்தான் ஒருநாள் கிராமத்துக்குப் போனான். “ இன்று நாம் நம் நிலங்களைப் பார்க்கவேண்டும்” என்று சின்னதுரையிடமிருந்து உத்தரவு பிறந்ததைக் கண்டு காரியஸ்தர் ஆச்சரியப்பட்டுப் போனார்.

“அப்படியல்லவா இருக்கவேண்டும்?’ என்று பாராட்டினார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/18&oldid=1104934" இலிருந்து மீள்விக்கப்பட்டது