பக்கம்:அதிசயப் பெண்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அதிசயப் பெண்


இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. கடலைக்காய், செடியின் மேல் இருக்காது. வேரிலேதான் இருக்கும். அதனால் வேர்க்கடலை என்று இதைச் சொல்வார்கள். இதோ பாருங்கள்” என்று விளக்கிக் கொண்டே காரியஸ்தர் ஒரு செடியைப் பிடுங்கிக் காட்டினார். வேரில் கொத்துக் கொத்தாய்க் கடலைக்காய்கள் இருந்தன. தன்னைக் காரியஸ்தர் ஏமாற்றவில்லை, கடலைச் செடிதான் ஏமாற்றிவிட்டதென்பதை, சீமைப் படிப்பில் தேர்ச்சி பெற்ற செல்வன் அப்போது தெளிந்தான் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/20&oldid=1104936" இலிருந்து மீள்விக்கப்பட்டது