பக்கம்:அதிசயப் பெண்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனி இழந்த கரும்பு

33

டிருக்கிறதல்லவா?” என்று கடவுள் அன்புடன் விசாரித்தார்.

“வம்சம் வளர்ந்து என்ன பிரயோஜனம்? ஜனங்கள் மதிக்கவில்லையே!”

“ஏன்? உன் பழத்தையும் கழியையும் தின்று இனிப்பாயிருக்கின்றன என்று பாராட்டவில்லையா?” என்றார் கடவுள்.

“பழத்தைத் தின்கிறார்கள். அதில் உள்ள விதையை முளைக்கப் போடுகிறார்கள். அதனால் என் வம்சம் வளர்கிறது. ஆனால் என் கழியைச் சீண்டுவதில்லை; விறகாகக்கூட எரிப்பதில்லை” என்று கரும்பு தன் குறையை எடுத்துச் சொல்லி முறையிட்டது.

“ஏன் கழியை விரும்புவதில்லே?”

“அதில் கணு இருக்கிறதாம்? அதற்காகக் கழியைத்தொடுவதில்லை.”

“அட, சோம்பேறி மனிதர்களா!” என்று படைத்த பெருமான் சொல்லிச் சிரித்தார். பிறகு, “இப்போது என்ன செய்யவேண்டும் என்கிறாய்?” என்று கேட்டார்.

“என்னிடமிருந்து கணுவை நீக்கிவிடுங்கள்" என்றது கரும்பு.

“அப்படியானால் நீ நிமிர்ந்து நிற்க முடியாதே!”

“வாழை நிற்கவில்லையா?” என்று கேட்டது கரும்பு.

“வாழை மரத்துக்கு உனக்குள்ள சுவை எது? உனக்குக் கணுத்தான் பூணாக உதவுகிறது” என்று சொன்னார் கடவுள்.