பக்கம்:அத்தை மகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

 ஏற்பாடு பண்ண முடியுமோ, அதற்கு வழியைப் பாரு............'

அவனும் சரி என்று தலையாட்டி வைத்தான். அவன் கிளம்பும் முன் ரத்தினம் அவனைத் தனியாகச் சந்தித்தாள்.

'அத்தான் !'

அவள் குரல் தழதழத்தது, அவள் தொண்டையில் துயரம் திரண்டு உருண்டது போலிருந்தது. அவளால் பேச முடியவில்லை.

அவன் அவள் அருகில் வந்தான். அவள் கொஞ்சம் முன் நகர்ந்தாள். அவன் அவள் கைகளைப் பற்றினான். அவள் அவனையே பார்த்து நின்றாள். தன் கண்ணில் கண்ணிட்டு அசையாது நின்ற ரத்தினத்தையே கவனித்திருந்த அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் உணர்ச்சியோடு அவனைப்பற்றி முத்தமிட்டாள். சுவைக்கக்காத்திருந்த பழச்சுளை உதடுகளின் ருசியைப் பருகினான் அவனும், அழுத்தமாக முத்தம் பதித்து.

உணர்ச்சிச் சுழிப்பு தன்னை மறந்த லயங்தன்னில் ஆழ்த்திவிடுவதற்கு முன்பாக அவள் விழிப்புற்று, விலகிக்கொண்டாள். வாசல் அருகே போய் கின்று அவனையே கவனித்தாள். ஒளி மிகுந்த கண்களில் பனி படர்ந்தது. பொங்கிவரும் அழுகையை அடக்க முயன்றுகொண்டிருந்தாள் அவள். தோல்விதான் அவளுக்கு.

'ரத்னம் '

அவன் உணர்ச்சி நிறைவோடு அழைத்து முன்வந்தான்.

'அத்தான் !' என்றாள். அதற்குமேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை. மறைந்துவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/25&oldid=981803" இலிருந்து மீள்விக்கப்பட்டது