பக்கம்:அநுக்கிரகா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

13

"கனி, பழம்னெல்லாம் ரசமான பேரை வச்சிக்கிட்டுத் தான் ரசாபாசமா நடந்துக்கிறாங்கன்னு சொல்லு!

"அதுனால தான் நான் பேரை மாத்திக்கலீங்க. அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். நம்ம பாப்பா பேரு கொஞ்சம் வாயிலே நுழையாத மாதிரி இருக்குதுங்க. மெம்பர்ஷிப் அட்டை வாங்கறதுக்கு முன்னாடியே மாத்திட்டா நல்லதுங்க, எங்க மாதிரிப் பார்ட்டிகளிலே பேர் தான் ரொம்ப முக்கியங்க."

"அரசியல் — அதுக்ரகா -— ஆதரவு-— எல்லாத்திலேயும் 'அ' தானே வருதுப்பா! இந்தப் பேரே போதும். சுருக்கிக் கூப்பிடணும்னா 'அநு'ன்னு நான் கூப்பிடற மாதிரிக் கூப்பிட்டுக்கலாமே?

" இல்லீங்க...வந்து...! "என்னப்பா இது? வந்தாவது போயாவது? அவள் முகராசிக்கே எல்லாம் நடக்கும்பா. . பேரை மாத்தி , ஒண்ணும் நடக்க வேண்டாம்.

"மானா. கானாவே மெம்பர்ஷிப் பத்திக் கேட்டப்போ 'என்னப்பா பேர் ஒரு தினுசா இருக்கே?' ன்னு சொன்னாருங்க ."

" அது பாருப்பா மானா, கானா?'!

"அதாங்க செயலாளர் மாம்பழக்கண்ணன்.'"

"இந்தப்பேர் அவம்மா வெச்சது! அவன் இப்போ உயிரோட இல்லை, நான் பண்ணின பாவம் அல்பாயுசாப் போயிட்டாள். அவள் வச்சிட்டுப்போன பேரை மாத்த வேண்டாம்னு பார்க்கிறேன், அதாவது 'செண்டி மெண்டல் ரீஸன்'. செண்டிமெண்டல்னா.. உணர்ச்சிமயமானதுன்னு வச்சுக்கயேன்."

"சரிங்க, அவங்ககிட்டே சொல்லிப் பார்க்கிறேன், அவங்க கேட்பாங்களோ, மாட்டாங்களோ, எதுக்கும் ஒரு பேரை யோசிச்சு வச்சுக்குங்க.".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/15&oldid=1255954" இலிருந்து மீள்விக்கப்பட்டது