பக்கம்:அந்தமான் கைதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

 பொன் : சரி! இதோ கூட்டிவரச் சொல்லுகிறேன். அடே யாரடா அங்கே? சீக்கிரம்போய் வேலைக்காரி லெகஷ்மியிடம் சொல்லி லீலாவை சீக்கிரம் ஜாக்கிரதையாக அழைத்துவரச் சொல்.

(வேலையாள் போகிறான்.)

முனி : இதெப் பத்தி நீங்க கொஞ்சங்கூட யோசிக்கவே வேண்டாம். அதெ இப்ப ஒரு நிமிசத்திலே தொலைச்சுப்புடுவேன். ஆனா எஜமான், இந்த வருசம் கருப்பையா பூசைக்கு வேண்டிய செலவெல்லாம்.........

பொன் : அது எவ்வளவானாலும் நானே கொடுக்கிறேன்; எப்படியும் இந்த...... (லீலாவை அழைத்துக்கொண்டு லக்ஷ்மி வருகிறாள்)

முனி : வாங்க வாங்க, இப்படி உட்கார வையுங்க. (உட்காரவைக்கிறாள். முனியாண்டி தேங்காயை உடைத்துக் கற்பூரம் காட்டி சாம்பிராணிப் புகையைக் கிளப்பிக் கையில் உடுக்கை யெடுத்து அடித்து சாமி அழைக்கிறான். முனியாண்டிமீது சாமி வந்து சீது கிறது. லீலாவும் பேயாட ஆரம்பிக்கிறாள்.) நீ யாரம்மா? எங்கே வந்தே? ஒனக்கு என்ன வேணும்? வேண்டியதைக் கேட்டு வாங்கிக்கிட்டுப் போயிடு; இல்லேன்னா நான் என்ன பண்ணுவேன் தெரியுமில்லே? (லீலா பதிலே பேசாமல் ஆடிக்கொண்டே இருக்கிறாள்) சரி சரி நீ ஒழுங்காப் போமாட்டே! ஊம். குடுக்கவேண்டியதைக் குடுத்தாத்தான் போவே. (பிரம்பை எடுத்து உருவி வளைத்து) ஊம் என்ன சொல்றே! நீ யாருன்னு சொல்றியா இல்லேன்னா (என்று பிரம்பை ஓங்குகிறான். லீலா பேரிரைச்சல் போட்டு) டேய்! நீதானா என்னை விரட்ட வந்தவன்? உம் என்னை விரட்ட உன்னால் முடியுமாடா? உம் என்னை யாரென்று நினைத்துக் கொண்டாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/104&oldid=1072292" இலிருந்து மீள்விக்கப்பட்டது