இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106
புறப்பட்டுவிட்டேன், கவலைப்படாதே! அடுத்த கப்பலில் பதிவு செய்யப்படும் முதல் சீட்டு என்னுடையதுதான்.
(விரைந்து செல்லுகிறான்)
இடம் : திவான்பகதூர் மாளிகை.
காலம் : மாலை.
- பாத்திரங்கள் : திவான்பகதூர், முனியாண்டி, ஜம்பு
- [பொன்னம்பலம் வருத்தமாக உட்கார்ந்திருக்கிறார். முனியாண்டி வருகிறான்.]
முனி: நமஸ்காரமுங்க! என்ன இப்படி ஒரு மாதிரியா இருக்குறீங்க?
பொன் : (வெறுப்போடு முறைத்துவிட்டு மறுபுறம் திரும்பிக்கொள்ளுகிறார்.)
முனி : ஏங்க? என்னைப் பார்க்கப் புடிக்கிலிங்களா? ஆமாமா ஒங்க காரியந்தான் முடிஞ்சுபோச்சே இன்னெமே இவனைப் பார்த்து என்ன பிரயோசனம்? உம், நீங்க என்னைப் பாக்காட்டிப் பரவாயில்லே, பேசினபடி பணத்தைக் கொடுத்திடுங்க!
பொன் : (கோபமாக) பணமாவது பிணமாவது, ஏதுடா பணம்! அயோக்கியப் பயலே!
முனி : என்னங்க இப்படிச் சொல்றீங்க! எப்படியாவது கல்யாணத்தே முடிச்சுப்புட்டா ரூவா ஐநூறு தாரென்னு நீங்கதானே சொன்னீங்க!
பொன்: போதும், போதும்; நான் கல்யாணம் முடித்ததும் கட்டையிலே போனதும்; இதுவரை உன் பேச்சைக்