130
ஓடி விடுகிறான். அதே சமயத்தில் அங்கு வந்த பாலு அங்கு கீழே கிடந்த ரத்தம் தோய்ந்த பிச்சு வாவை நடுக்கத்துடன் எடுக்கிறான். தூக்கத்திலிருந்து கோர சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்த லீலா ஒன்றும் புரியாமல் கொலை-கொலை-கொலை' என்று கத்துகிறாள். வேலையாட்கள் எல்லாம் விழித்து வந்து, 'விடாதே பிடி, பிடி’ என்று கூச்சலிட்டுப் பாலுவைச் சூழ்ந்து பிடித்துக்கொள்ளுகிறார்கள். ஒருவன் விளக்கைப் போடுகிறான். வெளிச்சத்தில் பாலுவை ரத்தம் தோய்ந்த பிச்சுவாவுடன் கண்ட)
லீலா : ஹா ஐயோ! இதென்ன! நான் காண்பது கனவா, அல்லது உண்மைதான்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!
பாலு : (தனக்குள்) எல்லாம் விதியின் விளையாட்டு.
கூட்டத்தில் ஒருவன் : ஆளைப்பார், கொலைகாரப் பயலுக்கு வேதாந்தாம் வேறா ஏண்டா நிற்கிறாய்? சீக்கிரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விஷயத்தைச் சொல்லிப் போலீசை அழைத்துவா? உம், போ சீக்கிரம்.
இடம் : வீதி
- [வீதியில் பலர் பேசிக்கொள்ளுதல்]
ஆள் 1 : பாவம் என்ன இருந்தாலும் ஒரு மனுஷனை இந்த மாதிரிக் கொலை செய்யக்கூடாது.