பக்கம்:அந்தமான் கைதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


ஆள் 2 : அடபோங்க சார், பச்சைப் பசலைகளுடைய வாழ்க்கையைப் பாழ்படுத்துகிற இப்பேர்ப்பட்ட கிழட்டுப் பயல்கள் இருந்தா என்ன, செத்தா என்ன சார்?

ஆள் 3 : ஆமாமா. பாலசுந்தரத்தைப் போல நாலு பேரு இப்படித் துணிஞ்சாத்தான் இந்த மாதிரி அநியாயங்க ஒழியும்.

ஆள் 1 : ஆமா நடராஜன்தான் ரொம்ப சீர்திருத்தவாதியாச்சே, ஏன் இந்தக் காரியத்தை முன்னாடியே தடுத்திருக்கக் கூடாது?

ஆள் 2 : அவன் தான் ரெங்கோனுக்குப் போயிட்டானே, இருந்தா சம்மதிப்பானா? தங்கச்சின்னா உயிரையே விடுறவனாச்சே!

ஆள் 4 : நடராஜனுக்குத் தகவலே எட்டியிருக்காதோ?

ஆள் 3 : கலியாணத்துக்கு அப்புறம் இங்கே வந்திருந்தானாமே, நான் பாக்கலே! கொலைக்கு அப்புறம் நடராஜனையே காணோமாம்.

ஆள் 1 : ஆமா, பாலுவுக்கும் லீலாவுக்கும் முன்னாடியே தொடர்பு உண்டோ?

ஆள் 4 : பள்ளிக்கூடத்துப் பழக்கமாம். அந்தப் பொண்ணு பாலுவையேதான் கட்டிக்கிருவேன்னு ஒத்தக்கால்லே நின்னுச்சாம்

ஆள் 1 : அடே, பின்னே அப்படியே பண்ணித் தொலைச்சிருக்கலாமே.

ஆள் 2 : அட அவன் ஒரு கோழைப்பயல் சார். வீட்டுக்குப் பயந்தவன்.

ஆள் 3 : இப்பக் கொலை செய்யத் துணிஞ்சவனுக்குக் கல்யாணத்துத்கு முன்னேயே புத்தியிருந்தா?...

ஆள் 4 : உம்-உலகமே இப்படித்தான். நம்மளவங்களுக்கெல்லாம் காரியம் முடிஞ்சதுக்கப்புறம்தானே மூளை தொறக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/132&oldid=1073010" இலிருந்து மீள்விக்கப்பட்டது