133
அழுக்கு நிறைந்த கந்தல் ஆடையுடனும் நீண்ட தாடியிடனும் பைத்தியம்போல் சுற்றி வருகிறான்.)
நபர் 1 : (பத்திரிகையைப் புரட்டிப் பார்த்து ஆச்சரியத்துடன்) திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை கொலை வழக்கு நாளைக்குத் தீர்ப்பாமே?
(நடராஜன் திடுக்கிட்டு அதைக் கவனிக்கிறான்).
நபர் 2 : நாளைக்கா? எங்கே அதைப் படியுங்கள்!
நபர் 1 : (பத்திரிகையைப் படிக்கிறார்)
திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை கொலை வழக்கு
பொருந்தாமணத்தின் கொடுமை!
கள்ளக்காதலன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்!
இன்று இவ்வூர் பிரபல மிராஸ்தார் திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை கொலை வழக்கு செஷன் ஜட்ஜ் அமானுல்லாகான் அவர்கள் முன் விசாரிக்கப்பட்டது. எதிரி தான் கொலை செய்தது உண்மை என்று ஒப்புக் கொண்டான். எதிரி கொலை செய்ய நேர்ந்த காரணத்தைக் கூற மறுத்துவிட்டான். எதிரிக்கும் கொலை செய்யப்பட்டவரின் நான்காவது மனைவிக்கும் ஏற்பட்ட கள்ளக் காதலே கொலைக்குக் காரணமென்று நம்பப்படுகிறது. மேற்படி கொலை வழக்கு சம்பந்தமாய் நாளைத் தீர்ப்பளிக்கப்படுமெனத் தெரிகிறது. (ந. நீ.)
- (படித்து முடிக்கும்வரை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நடராஜன் ஆவேசத்துடன் எழுந்து)