19
அடடே இவள் சினிமாவிலே ஆக்டுப்பண்ணி இருக்காளாம்...பாரப்பா! பெரிய ஸ்டார் போலே இருக்கு. சுலோசனாவாம்.
ஜம்பு: சுலோசனாவா?......
கணபதி: அப்படி ஒரு ஸ்டாரே இல்லையே......? ஏதாவது எக்ஸ்ட்ராவா வந்திருக்கலாம்.
பொன்: பாதகமில்லே, சுமாரா இருக்கா. ஆள் கருப்பா செகப்பாங்கிறது தெரியலையே.
ஜம்பு: கலர் போட்டோவா இருந்தாத் தெரியும். புடிச்சிருந்தா நேரிலேயே பார்த்துடலாமே?
கணபதி: சிகப்பைவிட கருப்புதான் அழகு. மன்மதன் கருப்புத்தானே. மகாவிஷ்ணு, கிருஷ்ணன், ராமர் இவர்களெல்லாம் கருப்போ இல்லையோ..?
(முனியாண்டி பொடி உறிஞ்சியபடி வருகிறான்)
முனி: மகமாயி!...... நமஸ்காரம் வருதுங்க.
பொன்: ஓ, பூசாரியா! வாய்யா, வா, முனியாண்டி, இங்கே பார்; இந்தப் பெண் புடிச்சிருக்கா பார்.
முனி: யாருக்கு?
பொன்: அட நமக்குத்தானையா பார்.
முனி: பொண்ணா இது?
பொன்: ஏன்?
முனி: (ஐயரையும் போட்டோவையும் பார்த்து) ஒஹோ நம்ம கணபதி ஐயர் சாமி பொம்பளே வேஷம் போட்ருக்காபோலிருக்கு!