50
பஞ்சகாலத்திலே இரண்டாயிரம் மூவாயிரம் போகிறதென்றால் சாமானியமா என்ன?
சேர்வை : ஆமாங்க! அதுக்கு என்னங்க பண்றது?
முனி : ஐயா சொல்றபடி கேட்டா ஒனக்குப் பணத்துக்குப் பணமும் வரும் ஐயா தயவும் கிடைக்கும். அவுங்கக் குடும்பத்துக்கு உபகாரம் செய்த புண்ணியமும் கிடைக்கும்.
சேர்வை : நெஜமாவா? அப்புடீன்னா அதையேங்க நான் வேண்டாங்குறேன்? எப்படியாச்சும் அவங்களும் நல்லா இருக்கணும். எனக்கும் பணம் கெடைக்கனும.
முனி : அப்படீன்னா நான் சொல்றபடி செய்தா அது சீக்கிரம் முடியும்.
சேர்வை : என்ன செய்யச் சொல்றீங்க?
முனி : நீ உடனே கோர்ட்டுலே தாவாப் போட்டு எவ்வளவு சீக்கிரம் அந்த வீட்டை ஏலத்துக்குக் கொண்டு. வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டார வேணும்.
சேர்வை : ஐயோ பாவம். அவங்க பணத்துக்கு எங்கேங்க போவாங்க?
பொன் : அட அந்தக் கவலை உனக்கெதற்கையா? பணம் கொடுக்கத்தான் நான் இருக்கிறேனே.
சேர்வை : அப்புடீன்னா இப்பவே குடுத்துடுங்களேன். நான் வேணுமின்னாலும் எதாச்சுங் தள்ளிக் குடுக்கிறேன். எதுக்குங்க வீணா வக்கீலுக்குங் கோர்ட்டுக்கும் செலவழிக்கணும்.
முனி : அட அவுங்க அதுக்குத்தான் ஐயா இருக்காங்க..