இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
53
முனி : ...இருபது காசுதான் இருக்கா...சரி அதையாவது குடு (சேர்வை தனியாகப் போய் முடிச்சை அவிழ்க்கிறான்.)
முனி : (தனக்குள்) ஏன், அதைத்தான் விடணும். நாலு சிகரெட்டுக்கு ஆச்சு.
சேர்வை : (பணத்தைக் கொடுத்துவிட்டு) நான் வர்ரேங்க.
முனி : (காசைச் சுண்டி இடையில் சொருகிக்கொண்டே). ஆகா! மகமாயி...
(இருவரும் போகிறார்கள்)
இடம் : நடராஜன் வீடு
காலம் : காலை
(நடராஜனும் லீலாவும் இரண்டு நாற்காலிகளில் அமர்ந்துள்ளனர். நடராஜன் பாரதி பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றான், போஸ்டு பியூன் வருகிறான்.)
போஸ்ட் : போஸ்ட்!
நட : என்ன?
போஸ்ட் : உங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் இருக்கிறது.
நட : ரிஜஸ்ட்டரா? (லீலா உள்ளே போகிறாள். கையெழுத்தைப் போட்டு ரிஜிஸ்ட்டரை வாங்கிப் படிக்கிறான், போஸ்ட்மேன் போகிறான். காமாட்சி வருகிறாள்.)
காமா : என்னடாப்பா அது?