பக்கம்:அந்தமான் கைதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


நட : ஒன்றுமில்லை. ராமசாமி சேர்வை பணத்துக்காக கோட்டீஸ் கொடுத்திருக்கிறான். ஒரு வாரத்திற்குள் பூராத் தொகையையும் கட்டாவிட்டால் கேஸ் போட்டு விடுவானாம். அவனுக்கும் பணப் பேய் பிடித்துவிட்டது போலிருக்கிறது,

காமா : அவனும் எத்தனை நாளைக்குத்தான் பொறுத்திருப்பான்? வருசமும் அஞ்சாறுக்கு மேலே ஆச்சு. இந்தான்னு ஒரு அரைக்காசு வட்டி கூடக் கட்டலே. அவன் தான் என்ன செய்வான்? இத்தினி நாளா எனக்காகத் தான் பொறுத்துக்கிட்டு இருந்தான்...

நட : இப்போ ஒங்க அண்ணனுக்காக நோட்டீஸ் விட்டிருக்கான்.

காமா : இதென்னடா நீ இப்படிப் பேசுரே சேர்வை நோட்டீஸ் விட்டான்ன அதுக்கு எங்கண்ணன் என்ன பண்ணுவாரு? அவருப் பேச்சே பேசாட்டிப் போனத்தான் ஒனக்கு சரிப்பட்டுவராதே. இந்த வீடும் போயிட்டா அப்புறம் தெரியும் சந்தியிலே நிற்கவேண்டியதுதான்.

நட : எத்தனையோ கோடி ஜனங்கள் சந்தியிலே நிற்கும்போது நாமும் நின்று விட்டுப் போகிறோம். இதற்காக ஒரு பெண்ணைப் பாழுங் கிணற்றில் தள்ளி விட்டுவிடுவதா என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/55&oldid=1029592" இலிருந்து மீள்விக்கப்பட்டது