இடம் : வீதி.
காலம் : மாலை
பாத்திரங்கள் : ஜம்பு, பாலசுந்தரம்.
ஜம்பு : ஹலோ மிஸ்டர் பாலு குட் ஈவினிங் குட் ஈவினிங் ஊம்......எங்கே இந்நேரத்திலே இந்தப் பக்கம். இவ்வளவு அவசரமா......
பாலு : அவசரம் ஒன்றுமில்லை; ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும், அதற்காகத்தான் .... இப்படி......
ஜம்பு : சரி, இப்பொழுது உன்னைச் சந்தித்ததும் ஒரு வகைக்கு நன்மைதான். இல்லை என்றாலும் நானே உன் வீட்டுக்கு வரவேண்டு மென்றுதான் இருந்தேன்.
பாலு : அப்படி என்ன முக்யமான காரியம்?
ஜம்பு : நம்ம திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை இருக்கிறாரல்லவா? அவருக்கு நாளைக்குக் கல்யாணம். அதற்கு இன்விட்டேஷன் கொடுக்கத்தான் வர வேண்டுமென்று இருந்தேன்.
பாலு : அவர் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லையே!
ஜம்பு : நான் இருக்கும்போது அவர் பரிச்சயமில்லா விட்டால் என்ன? எல்லாம் நம்ம தர்பார்தான் (ஒரு பத்திரிகையை எடுத்து அட்ரஸ் எழுதிக்கொடுக்கிறான்) இந்தா அவசியம் வந்துவிடவேண்டும். நம்ம