பக்கம்:அந்தித் தாமரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வசந்தம் வந்தது:

இதயத்துடிப்பு வளர்ந்தது; துடிக்கும் நெஞ்சோடு கல்யாணி கடிகாரத்தைப் பார்த்தாள். அது அப்போது தான் ஆறு முறை தன் இதய ஒலியைப் பரப்பிவிட்ட அமைதியில் டக் டக்கென்று சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது.

அக்தி மயங்கி வந்தது.

கை கொடிப் பொழுதிற்கு முன் கல்யாணி ஆனந்த வாரிதியில் மிதந்து கொண்டிருந்தாள். அவள் மகள் நளினி காலேஜ் முடிந்து சென்னையிலிருந்து வகேஷன்’ லிவுக்கு வந்திருக்தாள். அவள்தான் முன்னைவிட எப்படி நகாசு பெற்று விட்டிருக்கிறாள் ! கல்லூரிப் படிப்பும் கல்லூரி நாகரிகமும் படிப்பித்த போதனையாக இருக்கவேண்டும். தன் மகள் ஆனாலும் தாய்க் கண் கூடப்படலாகாது என்பார்களே...! தூத்துக்குடி எக்ஸ் பிரஸ் அவளைப் பொழுது விடியத் திருச்சியில் சேர்த்தது. தாய் மகளே அழைத்துவர ஆட்டோ ரிக்ஷா”வுக்கு உத்தரவிட்டாள். பிறந்த மனை மிதித்த களினுவை அப்பொழுது ஒன்றும் துண்டித் துருவிக் கேட்கவில்லை. பெற்றவள் பிரயாண அலுப்பு; படுத்தவள் எழுந்து குளித்து முழுகிச் சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டாள், தன் சிநேகிதி ஒருத்தியைப் பார்த்து வர.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/86&oldid=1318295" இலிருந்து மீள்விக்கப்பட்டது