பக்கம்:அந்தித் தாமரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

நம் பழைய பாசமும் பிணைப்பும் அவர்கள் மூலமாவது புத்துணர்வு பெறட்டும். நல்ல முடிவு என் காதில் விழச் செய். என்னை மீளவும் பைத்தியமாக்கிவிடாதே...! நளினா-சேகரன் வாழ்வில் வசந்தம் நிலவச் செய்!

நாகராஜன்.

தாயும் மகளும் ‘ஹோ’வென்று ஓலமிட்டு அலறினார்கள்.

டாக்ஸி காத்து நின்றது. சேகரனைக் காணப் பட்டணத்துக்குப் புறப்படவிருந்தார்கள் கல்யாணியம் நளினாவும்--தாயும் மகளும்!

அதே சமயம் வாசலை அடைத்துக் கொண்டு வழி மறித்தாற்போல அங்கு வந்து நின்றது மற்றொரு கார். அதிலிருந்து இறங்கியவர்கள் கல்யாணியின் அத்தான் நாகராஜனும், நளினாவின் காதலுக்குரிய சேகரனும்!—தந்தையும் மகனும்!

“அத்தான்” என்று அழைத்தாள் கல்யாணி. “சேகர்” என்று கூப்பிட்டாள் நளினா.

கல்யாணி, அன்று நீ உன் மகளுடன் அவள் என் சேகரை மணப்பதை மறுத்து உரையாடிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். அதே சமயம் என் சேகரும் உன் ஆத்திர மொழிகளைக் கேட்டானாம். அவள் தன்னை மறக்க வேண்டுமே என்பதற்குத்தான் தனக்கு விபத்தில் கால் நொண்டியாகிவிட்டதாகப் பொய் எழுதிவிட்டிருக்கிறான். நான் உனக்குக் கடிதம் எழுதிப் போட்ட பிறகு, நீ உன் மகளிடம் அவள் மனம்போல என் மகனை மனப்பதற்குச் சம்மதம் தெரிவித்ததையும் கேட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/98&oldid=1305812" இலிருந்து மீள்விக்கப்பட்டது