பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நத்தினி தயிர் ஊற்றிக் கொண்டதும், அவளுக்குப் பிடித்தமான துகையல் கிடைத்தது. வாய்க்கு உறைத்தது; நெஞ்சுக்கு இனித்தது. பிடிச்சோறு அதிகமாகவே சாப்பிட்டாள். “தாங்க் யூ, மம்மி!"

'ஒ.கே' சொல்லி, பாசத்தின் நன்றியை நன்றியுடன் அங்கீகரித்தாள் ரஞ்சனி.

“அம்மா, பாயாசம்!” என்று கேட்டுக் கொண்டு ஓடோடி வந்து, அம்மாவின் மடியில் துள்ளலோடு குந்திக் கொண்டான் பாபு. அம்மாவின் இலையிலேயே பாயசத்தைப் போடச் சொல்லிச் சமர்த்தாகவும் சாப்பிட்டான். அம்மாவின் பங்குக்கு உபரியாகக் கிடைத்த முந்திரிப்பருப்பு: ஐந்து; அப்பா தந்ததோ ஆறு. அவனுக்கென்று கிடைத்தது ஒன்றே ஒன்றுதான் இருந்து விட்டுப போகட்டுமே!உபரியாகத்தான இப்போது ஆதாயம்,கிடைத்து விட்டதே? ஐயையோ!-அத்தனே முந்திரிப் பருப்புக்களும் கண் மூடிக் கண் திறப்பதற்குள், வாய்மூடி வாய் திறப்பதற்குள் எங்கோ மாயமாய் மறைந்து விட்டனவே!

ரஞ்சனி மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பறத்தாள்.பத்து வருஷத்துச் சோகம் பத்து நிமிஷத்திலே காற்றாய்ப் பறத்து விட்டது போலவும் ஆறுதல் பெற்றாள்: பாபுன்னாபாபுதான் - பாபு சாப்பிட்ட மிச்சத்தில் மேலும் இரண்டு கரண்டி ஊற்றச் சொல்விச் சுவைத்துச் சாப்பிட்டாள். பாயசம் இன்றைக்கு ஏ, ஒன்!- ஏலக்காய் அமர்க்களமாக கணக்கிறது!

‘இன்னம் கொஞ்சம் பாயசம் வாங்கிக்கிடுங்க, மகேஷ்!” என்று சொல்லி உபசரித்தார், விருந்த படைத்தவர்.

"போதுமுங்க" என்றார் மகேஷ்.

"ரதிக்கு இன்னும் ஒரு கரண்டி பாயசம் ஊத்துடி, சேவகி," என்றாள், விருந்து தயாரித்த ரஞ்சனி.

108