"ம். . . மதி...மதி!"
"போதுமாம்டி: நிறுத்திக்கடி, தாயே!”
மதி வந்த ஒப்பனையில், பல் எல்லாம் தெரியக் காட்டி அசடு வழிய நகர்ந்தாள் ஏழைச் செவகி. அவள் பாடு இன்றைக்கு வேட்டைதான்!- ‘ஊம், வயிறு வெடிக்கச் சாப்பிட்டாகணும்!” என்று செல்லம் காட்டி, அன்பு காட்டி, வீட்டுத் தலைவியே பரிமாறும் போது, செவகிக் குட்டி பாவம், திக்குமுக்காடித் திணறி விடப்போகிறாள்:
முதன் முதலில், இரண்டாவது ஏப்பத்தையும் அதிகார பூர்வமாகப் பிரகடனம் செய்தார் ரஞ்சித்.
அவரவர்கள் எழுந்தார்கள். இம்முறை, ஜாக்கிரதையாக நீட்டின கைப்பிடித் துண்டை வெகு ஜாக்கிரதையாகவே வாங்கிக் கொண்டார் மகேஷ்.
இப்போதும், ரஞ்சித் புன்னகை செய்கிறார்,
அந்நேரத்திலே
பூஜைவேளையில் கரடி புகுந்தது.
அதாவது, சாப்பாட்டு வேளையில், இந்நாட்டு மன்னர் ஒருவர் பிரசன்னமானார்; அந்த நடுத்தெரு நாராயணனுக்கும் அங்கே விருந்து கிடைத்தது.
பிச்சைக்காரனுக்குக் கொண்டாட்டம்!
ரஞ்சனிக்கும்தான்.
மற்றுமோர் ஆச்சரியக்குறி!
அதோ பாருங்கள்!-கைப்பிடிக் கடிதத்துடன் தன்னாடைய தனி அறையை இலக்கு வைத்து ஓடிக்கொண்டிருக்கிறான் மாஸ்டர் பாபு!...
அ-7-A
109