பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"உங்க ஆசைப்படி, ராத்திரி வேணும்னா, நான் உங்ககூட உட்கார்ந்து சாப்பிட்றேதுங்க; இப்பைக்கு என்னை விட்டுடுங்களே, அத்தான்!"

தப்பிதமாக நடந்து கொண்ட விவரம் அறியாப்பாலகி, செய்த தப்பை மறைத்திட, விதரனையுடன் முந்திக் கொண்டு தந்தையைப் பரிதாபமாய்க் கெஞ்சுவது உண்டு.

இந்த உதாரணம்தான், அச்சமயத்தில் ரஞ்சித்தின் சிந்தையில் பளிச்சிட்டது. "சரி; தேவியின் இஷ்டம், என் பாக்கியம்!" அவருக்கே ஆகிவந்த படாடோபச் சிரிப்பு: அச்சிரிப்பில் அவருக்கே உரியதான பட்டவர்த்தனமான அன்பு; அந்த அன்பிலே. அவருக்கே இயல்பாக அமைந்த ஆன்ம நேயம்!-மறுபடி, சிரிப்பொலி; காந்தி நாணயங்கள் குலுங்குமே, அப்படி.

கூடத்தில், களை கூடுகிறது.

பாபு ரோஷக்காரன்!...

தட்டோடு வந்த ரஞ்சனி எடுத்த எடுப்பில் தன் அருமைச் செல்வனுக்குத்தான் முதன் முதலில் கேசரியை வைத்தாள்.

பாபுவுக்கு தாக்கில் ஊறிக் கொண்டிருந்த நீர் இப்போது வாய்க்கு மடை மாறியது. மகேஷ் பக்கம் அவன் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. "ரவாக் கேசரிக்கு மெட்ராஸ்லே ஆர்யபவன் தான் பிரசித்தம்; நாமகூட ஒருவாட்டி ஐலண்ட் க்ரவுண்டிலே சர்க்கஸ் பார்த்திட்டு அங்கே போய் எல்லாருமாய்ச் சாப்பிட்டிருக்கோம்; ஆனால் இப்ப அம்மா செஞ்சிருக்கிற இந்தக் கேசரி அதைவிடவும் அற்புதமாய் அமைஞ்சிருக்குதுங்க, அப்பா," என்று சான்றிதழ் வழங்கினான்; கையோடு இன்னொரு பிடி கேசரியையும் வாய்க்கு வழங்கினான்; 'தப்பு கொட்டிக் கொண்டான்.

123