பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித்துக்கு ஆனந்தம் பிடிபடவில்லை!-வாழ்க்கையென்றால், இதுதான் வாழ்க்கை; மனைவி மக்களுடன் மன மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இருப்பதற்கு உண்மையிலேயே கொடுத்துவைத்திருக்க வேண்டும்; இப்படிப்பட்ட பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்துவிடுகிறதா, என்ன?- கேசரியில் ஒரு துணுக்கு உள்ளே போனதும், குதூகலச் சிரிப்பு வெளியே வந்தது. "ரஞ்சனி. இங்கே வாயேன்; சீக்கிரம் ஓடிவாயேன்," என்று அலட்டினார். கொண்டவான்-உயிர் கொண்டவரின் ஆணைப் பிரகாரம் ஓடிவந்தளின் சோற்றுக்கையில், அத்தனை பேர் முன்னிலையில், ஒரு முத்தம் கொடுத்தார், "நிஜமாவே ரொம்ப அற்புதமாய் கேசரியைக் கிண்டியிருக்கே," என்றார்.

நாணிக் கண் புதைக்கிறாள் ரஞ்சனி.

வெங்காயப் பஜ்ஜியில் தேங்காய் எண்ணெய் வாடை அமர்க்களப்படுகிறது.

"வெங்காயப் பஜ்ஜின்னா நேக்கு ரொம்பவும் பிடிக்கும். ரஞ்சனி அம்மா; ரொம்ப நன்னாச் செஞ்சுட்டேள்!" என்றாள் ரதி.

ரஞ்சனியின் கண்களில் விஷமப் புன்னகை ஒளியாடியது: சாடை காட்டிச் சிறுமியை அழைத்தாள், "உனக்கும் ஒரு பாராட்டுக் கிடைச்சிட்டுது; இந்தா," என்று சொல்லி, அவளுக்குத் தன் பங்காக முத்தம் ஒன்றைத் தந்தாள்-கையில்!

"பாபு!"

ஏறிட்டு விழித்தான் பாபு.

யார் அழைப்பதாம்?

மகேஷா?

இல்லை.

124