பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“மிஸ்டர்.மகேஷ்!...”

இடைவெளி கொடுத்து, எதிரொலி கொடுத்த அழைப்புக் குரல் மகேஷைத் தூக்கிவாரிப் போட்டது. ரஞ்சித் தன்னை ‘மிஸ்டர்’ போட்டு இங்கிலீஷ்காரர்மாதிரி அழைக்கும் சமயத்திலெல்லாம் அவருக்கு நுரைஈரல் நுங்கும் நுரையுமாக ஆகிவிடுவது புதிதான அனுபவம் அன்று. “சொல்லுங்க, மிஸ்டர் ரஞ்...சித்”, என்று கேட்டுக்கொண்டார்.

மகேஷ் பேசிய பேச்சில் தொனித்த போலித்தனம் காரணமாக, ‘மிஸ்டர்’ மரியாதையை அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை ரஞ்சித். எனவே அவர் குரலில் இப்போது கடுமை சற்றே கூடுதலாக ஒலித்தது. “நீங்க எங்க பாபுவோடே பேசவேணும்னு ஆசைப்பட்டீங்களே?--- இப்போ வேணும்னா பேசுங்களேன்: பாபுவோட ரூமுக்கு அழைச்சுக்கினு போய், அவனோடு தனிமையிலே மனம்விட்டும் பேசலாமே, மிஸ்டர் மகேஷ்?” என்றார்.

“.....”

“கேட்கிறேனே?”

“நான் பேசல்லீங்க, மிஸ்டர் ரஞ்சித்!”

“ஏன்?”

“பாபுவோடே நான் பேச விரும்பல்லேங்க!”

அடிநாளிலே, பசிபிக் மகாசமுத்திரத்திலே, அணுப்பரிசோதிப்பின்போது, அணுக்குண்டுகள் இவ்வாறுதான் வெடித்திருக்குமா?

“ஒஹோ!... அப்படியா?”

128