பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“சரி!...” என்று விடை கொடுத்தார்: விடை சொன்னார்!- சொன்னவர் சாட்சாத் மிஸ்டர் மகேஷ்தான். ரஞ்சனியின் சொல் அவருக்கு “இலட்சுமணன் கோடு” அல்லவா? ஏன், ரஞ்சித்தின் பேச்சையும் அவர் என்றைக்குமே தட்டியது கிடையாதுதான்!...

ரஞ்சனி வசீகரமான தன் உதடுகளில் புன்னகை அணிகிறாள். ஒர விழிப் பார்வையால் மகேஷை அளந்த போது, மாரகச் சேலை சற்று நழுவி விட்டது. சுயப் பிரக்ஞை நழுவியதால் வந்த வினை!

ரஞ்சித் ஒடிப்போய், மனைவியின் சரிந்த புடவையைச் சரி செய்தார். பரவாயில்லே!...என்று தட்டிக் கொடுத்தார்.

“சரிதானே, ரஞ்சித்?”-மகேஷ்.

நாளேக்கு மதியத்திலாவது முதல்வரைக் கோட்டையில் போய்ச் சந்தித்துவிட வேண்டும்!--- “ஆல் ரைட்!...ஒ.கே!” என்று ஆமோதித்தார் திருவாளர் ரஞ்சித். மறுகணம்! அவர் விடுகதைச் சிரிப்பொன்றை எதிரொலிக்கச் செய்யவும் மறந்துவிடவில்லை!,..

138