"சரினு சொல்லுங்க; நீங்க இப்ப இருக்கிறது தமிழ் மண்ணுக்கும்!"
"சரி, பாபு!"
"ஓ. கே!"
ரஞ்சனியின் முகத்திலே ஈ ஆடவில்லை!
ரஞ்சித் இமைக்க மறந்திருப்பார், பாவம்!
ஆகாயக் கப்பல் எங்கேயோ பறந்தது.
அந்த ஸ்தலத்தில் ரதி வந்ததுதான் தாமதம்; அங்கே ஜனநாயகப் பண்புடன் விசித்திரமான பரபரப்பு அரசாளத் துவங்கியது.
மறு பத்தாவது வினாடியில்:
அவர்கள் அனைவரும் திட்டமிட்டபடி, நிகழ்ச்சி நிரல் ஒழுங்குமுறையாகவே நடந்தேறிற்று.
தொலைக்காட்சி: பலே ஜோர்!
வானொலியில், ஜானகி, டி, எம். எஸ், ஜேசுதாஸ் பாடல்கள் படு டக்கர்!
'ஹோட்டல் டாஜ் கொரமாண்டெல்': "வருக, வருக! உங்கள் வரவு நல்வரவாகுக!"
மெரினாக் கடற்கரையின் சிலம்பொலியில், நந்தினி விலாசம் குடும்பத்தினரும் ரதி-மகேஷ் ஜோடிக் காதலர்களும் கும்மாளமிட்டுச் சிரித்த சிரிப்பொலி இரண்டறக் கலந்து எதிரொலித்தது.
ஆனால், ஒன்று:
பாங்கர் ரஞ்சித் இட்டதுதான் சட்டம்! அவருடைய அன்பில் குறுக்கிட யாருக்குத்தான் தைரியம் வரும்?—
154