பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுக்கவிக்கு ஒரு மேத்தா இல்லையா? அப்படித்தான்.

பாபுவிடம் கேட்க வாயெடுத்தாள் ரஞ்சனி. அதற்குள், அவள் திருஷ்டியில், ரதியோடு அத்தான் உரையாடிக் கொண்டிருந்தது தொலைதூரக் காட்சியாகத் தெரியவே, கைந்நொடிப் பொழுதுக்குத் தடுமாற்றம் அடைந்து, அதே கைந்நொடிப்பொழுதில் நிலையைச் செப்பனிட்டுக் கொண்டவளாகக் கேள்வியைக் கேட்டாள்: “பாபு, நானும் உன் அப்பாவும் உன்னைத் தெய்வமாகப் பாவிச்சு வாரதாகச் சொன்னோம்!”

“மறுபடியும் பூச்சாண்டி காட்ட ஆரம்பிச்சிட்டியா. அம்மா ?”

“பெற்ற தாய் தன் மகனுக்குப் பூச்சாண்டி காட்டினால், அப்பறம் உலகம் அழிஞ்சிடாதா, பாபு? ஆனா நீ எனக்குப் பூச்சாண்டி காட்டினால், நான் அதையும் வரவேற்கத் தயாராவே இருக்கேன். ஆமாம்!”

“உன்னைப் புரிஞ்சுக்கிட எனக்கு வயசு பத்தாது. அம்மா! சரி, சரி; அப்பா கூப்பிடப்போறாங்க. அடடே, மகேஷை விட்டுட்டு அப்பாவோடே ரதி பேசிக்கிட்டு இருக்காங்க போலிருக்குதே, அம்மா?” என்று எதிர்த் திசையைச் சுட்டிக்காட்டினன் பாபு.

“பேசிறதினாலே, பெண்ணோட கற்போ, இல்லே ஆணோட கற்போ கெட்டுப்போயிடாது, பாபு...இப்படி, மனசுக்கு ஏதாச்சும் ஒரு மாற்றம் சமயங்களிலே தேவைப்படுறது இயற்கைதான்!” என்றாள் ரஞ்சனி; நெஞ்சைத் தடவி விட்டுக்கொண்டாள்.

“விட்டகுறையைத் தொட்டகுறையாக நீ ஏதேதோ பேசுறாய்; இதையெல்லாம் நான் என்ன கண்டேன்? நான் பாவம், பச்சைப்பிள்ளை, அம்மா!” என்று பரிதாபக் குரலெடுத்துச் செப்பினன் பாபு;

160