பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத் தருணத்தில்:

சோமையா வந்து நின்றார், “சின்ன எஜமானரைத் தேடி யாரோ அசோகனம் வந்திருக்குதுங்க," என்றார்,

பாபு கடிதங்களைக் கையிலே ஏந்தியவனாக, முகப்பு மண்டபத்துக்குப் புறப்பட ஆயத்தப்படுகிறான்.

‘பாபு, இந்த ரெண்டு லெட்டரையும் என்ன செய்யப் போறே? என்று விசாரணை செய்தார் நந்தினி விலாசத்தின் பாங்கர் ரஞ்சித்.

“லெட்டர் ரெண்டையும் ஊறுகாயா போடமுடியும்:மூச்சுக்காட்டாமல், இது ரெண்டையும் மிஸ்டர் மகேஷ் கையிலே ராத்திரி விருந்து முடிஞ்சதும் ஒப்படைச்சிடு வேன்.” என்று விவரத்தைத் தெரியப்படுத்திவிட்டுத் தலையை உயர்த்தினான் பாபுப் பயல் அவன் திருஷ்டியில் இப்போதும் பரசுராமரின் சித்திரம் வினையெனப்பட்டுத் தெறித்தது. மின்வெட்டும் நேரம் சில ஆனான்; மறு கணம் சிலைக்கு ஜீவன் வந்தது. “ஒரு செகண்டிலே வந்திட் றேன்.’ என்று சேதி சொல்லிவிட்டு, அங்கிருந்து விரைத்தான்.

ரஞ்சனி ஊமைவலி தாளாமல் திண்டாடுகிறாள்.

ரஞ்சித் நெஞ்சுவலி தாங்காமல் தத்தளிக்கிறார், இந்தப் பாபு, பழனிமை ஆண்டியா, என்ன?

உண்மைதான்! பாபு, பழனிமலையின் ஆண்டியாகத் தான் இருப்பான்!

பின்னே, பரசுராமரின் அவதாரம்தான் தனக்கு மிகவும் இஷ்டப்படுமென்பதாகப் பயங்காட்டவில்யைா இந்தப் பாபு!

180