பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைப்பீங்களோ, அதையேதானே நானும் நினைப்பேன்? உங்களுக்குத் தெரியாதுங்களா, அத்...அத்தான்?” என்றாள் ரஞ்சனி. இப்பொழுதுதான் புன்னகை பிறக்கிறது: மணக்கிறது.

“சபாஷ்!” என்று வெகு அட்டகாசமாகச் சிரித்தார் ரஞ்சித். “அப்படிச் சொல்லடி, ரஞ்சனிக் குட்டி!”

ரஞ்சனி வலது கன்னத்தைத் தடவி விட்டுக் கொள்ள நேர்ந்தது.

பயம் ஒன்றும் இல்லை.

கிள்ளி விட்டார்.

செல்லக் கிள்ளல்.

அவ்வளவுதான்!

“கோபமா?”

“இல்லே, சந்தோஷம்!”

அவளுடைய மனப்பூர்வமான சிரிப்பை இப்போதும் அவர் மனப்பூர்வமாக நம்பினார்!...

22