பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“ஊம்!”

“சொல்றேன்.”

“சொல்லுங்க.”

“என்னமோ கணக்குப் போட்டடீயே கொஞ்சம் முந்தி? அது என்னவாம்?”

“கணக்குப் போடலேங்க கணக்குச் சொன்னேன்.”

“என்ன கணக்கு?”

“இட்லிக் கணக்கு!”

“மெய்யாவா?”

“பின்னே, பொய்யா?”

“ரஞ்...!”

“அத்...!”

அவர் அழுதுகொண்டே சிரிக்கிறார்.

அவளோ சிரித்துக்கொண்டே அழுகிறாள்.

அவள் கண்ணீரை அவர் துடைத்தார்.

அவரது கண்ணீரை அவள் துடைத்தாள்.

ரஞ்சனியின் அன்பினாலும் தயவினாலும் கிட்டிய பதின்மூன்றாவது இட்டிலியை ஒரே வாயில் போட்டுக் கொண்டு விழுங்கினார்; விழுங்கின ஆத்திர அவசரத்தில் விக்கல் எடுத்தது. தேடி வந்த தண்ணீரை ஒரே வாயாகக் குடித்தார்; ஒவல்டின் ஓடிவரவே, அதை இரண்டு வாயாகப் பருகினார். இத்தனை ஆர்ப்பாட்டங்களும் யாதொரு விக்கினமும் இல்லாமல் சுபமாக நிறைவெய்தியது தான் தாமதம்: ஏப்பம் ஒன்று தாமதமின்றிப் பறிந்தது. லாலி பாட வேண்டாமோ?

28