திருப்தி. இல்லாவிட்டால், அதற்கு வேறு கிண்டல் செய்து விடுவானே பாபு?-ஊம், சுட்டிப் பயல்!
மகேஷ் அபிப்பிராயம் கேட்டதற்கு ரஞ்சனி சொல்கிறாள்: “மகேஷ், நீங்க சொல்றது பொதுவாச் சரியாய்த் தான் இருக்கும், ஆனா, இப்ப நிலைமை வேறே. நம்ப நந்தினிக்குட்டி இப்போ பசியாறிட்டுத்தான் பாப்ம்யூஸிக்கை ரசிச்சுக்கிட்டு இருக்குதுங்க”. நமட்டுச் சிரிப்பு வசீகரப் பாவனையில் நழுவுகிறது.
“ஒஹோ? அப்படியா சங்கதி”-மகேஷ் ஆர்ப்பாட்டமாகவே சிரித்து வைத்தார்; ஆனால், கடுகத்தனை அசடாவது வழிய வேண்டுமே!...மூச்!...
உயிர் வாழ்க்கைக்குத் துணையாக இருப்பவளின் மெல்லியதான நகைச்சுவைப் பண்பைச் சிரித்து அனுபவிக்க ரஞ்சித் ஒருநாளும் தவறியதே கிடையாது.
அந்தப்புரத்தில் வேலைக்காரச் சிறுமி கைதவறிப் போட்டுவிட்ட பாத்திரத்தின் ஒலி நாலுடிறத்திலும் எதிரொலிக்கிறது. செவகி அசமந்தம்!...
ரஞ்சனியும் ரஞ்சித்தும் சொல்லி வைத்த மாதிரி ஒரே தருணத்தில் சிந்தனை விழிப்புப் பெற்றனர். இருவரும் ஒரே சமயத்தில் அண்ணாந்து பார்தத பின், ஒருவரையொருவர் ஆழமாகப் பார்த்துக் கொள்ளவும் தொடங்கினர். அர்த்தமுள்ள இளநகை இருதரப்பிலும் மலர்ந்தது.
மேற்கத்தியச் சங்கீதம் நந்தினியுடன் இன்னுமா விளையாடிக் கொண்டிருக்கவேண்டும்?
நந்தினியின் மேலை நாட்டு இசை மோகம் பற்றி ஒரு சமயம் மகேஷ் விமர்சனம் செய்த பழைய சம்பவத்தை இருவருமே அசை போட்டிருக்கிறார்கள் என்பதற்கு விநயமான இளநகை ஆர்த்தம் சொல்வியிருக்கலாம்.
33