பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித்துக்குச் ‘சுரீர்’ என்றது. கொஞ்சம் முந்தி தமக்கும் ரஞ்சனிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாகவே ஒட்டுக்கேட்டிருப்பாள் போலிருக்கிறதே இந்தப் பொல்லாத பெண்? இந்தக் கைங்கர்யத்திலும் பால்கனி இசை இவளுக்குக் கை கொடுத்திருக்கத்தான்வேண்டும். “நந்தினி, உன் ஆசை நியாயமானது; அதை நியாயப்படுத்திடுறேன். ஒரு காரியம் செய்யேன். பெரிய மனசு பண்ணி மறுபடி ஒரு வாட்டி மாடிக்கு ஒடித் திரும்பி வந்திடு; நீ வந்து சேர்ந்தானதும், நீ ஆசைப்பட்ட விதத்திலே, நீ கேட்டு ரசிக்கிற மாதிரி, நேருக்கு நேர் நான் டயலாக் பேசிடுறேன். என்ன, சரி தானே?”

நந்தினியின் முகப் பருக்கள் தோன்றியிருந்த கன்னங்களில் குழி விழும் இடங்கள் ‘சோ’ வென்று வெறிச் சோடிக்கிடக்கின்றன. ஒரு விஷயம் மாத்திரம் அவளுக்குப் புரிந்தது. அப்பா யதார்த்தமாகப் பேசவில்லை; நெஞ்சுக்குள்ளே என்னவோ குறுகுறுக்கிறதே!- “எனக்கு இப்ப டைம் இல்லை: உங்க வசனங்களை இனிமேல்தான் நான் ரசிக்கணும் என்கிறதும் இல்லேங்க, டாடி!”

பாபு தப்பிப் பிறந்ததிலிருந்துதான் நந்தினியின் இளவரசித் தர்பார் ஓரளவிற்கு ஆட்டம் காணத் தொடங்கியது: மகேஷ்கூட அறிவார், “அப்படியா ஆல்ரைட், மை டியர் மகளே!” என்று துளியும் சிரிக்காமல், கண்டிப்பான ---அழுத்தமான குரலெடுத்துச் சொன்னார் ரஞ்சித்.

ஆனால்---

திருமதி ரஞ்சித்துக்குச் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. “அம்மாடி, உனக்குப் பசியெடுக்கிறதுக்காச்சும் டைம் இருக்குமா?” என்று விசாரித்தாள்.

கைந்நொடிப் பொழுதுக்கு மட்டுமே பற்கள் வெளியே தெரிந்தன. “எனக்குப் பசி எடுத்து ரொம்ப ரொம்ப

38