பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்தினி தவித்தாள்.

தடுமாறினாள் நந்தினி. ‘அ...ப்...பா!’

இந் நியிைல்:

தொலைபேசி, மணி அடித்தது.

ரஞ்சனி விரைந்தாள். “நம்ம பாபுவாகத்தானுங்க இருக்கும்!”

“ஏன், நம்ம மகேஷாகவும் இருக்கலாமே?...”

“பேஷாக அப்படியும் இருக்கலாமுங்க!”

“ஒஹோ?”

“ஆனால்...?”

“சொல், ரஞ்சனி, சொல்!”

“அது நம்ப பாபுவாகவும் இருக்கலாம்தானே, அத்தான்?”

“ஓ! அப்படியும் இருக்கலாம்தான்!”

“அப்படியே இருந்திடட்டுமே!”

“ஆஹா! அப்படியே இருந்திடட்டும், ரஞ்சனி! ” பாசம் பந்தயக்குதிரை ஆயிற்று...!

44