இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அந்தி நிலாச் சதுரங்கம்
3.பாபு! --- ஒரு பிரச்சினை! |
பிரச்னைதான்!....
தொலைபேசியில் அழைப்பது யாராக இருக்கும்?
ரஞ்சித்தின் சிந்தனைகள் தாயம் ஆடுகின்றன.
‘கண்மணி பாபுவா?-விடுமுறை தினங்களில் ஹாஸ்டலிலிருந்து நேராக வீட்டுக்கு வருவதானால், இந்நேரம் வந்திருப்பான்: இம்பாலாவில் ஏறமாட்டான்: வினோபாஜி மாதிரி நடந்துதான் வருவான் நடந்துதான் போவான்: இந்தச் சின்ன வயதிலேயே, பற்றற்ற-பற்றறுத்த நிலை ஏன்தான் ஏற்பட்டதோ? எப்படியும் வந்துவிடுவான்; வாரத்திலே, ஆறு நாட்களில் சுமக்க முடியாமல் சுமந்து வைத்திருக்கும் பாசத்தையும் அன்பையும் ஒரு வீவு நாளில் எங்கள் முன்னிலையில் கொட்டி அளக்காமற் போனல்,
45