பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 
அந்தி நிலாச் சதுரங்கம்

3.பாபு! --- ஒரு பிரச்சினை!


பிரச்னைதான்!....

தொலைபேசியில் அழைப்பது யாராக இருக்கும்?

ரஞ்சித்தின் சிந்தனைகள் தாயம் ஆடுகின்றன.

‘கண்மணி பாபுவா?-விடுமுறை தினங்களில் ஹாஸ்டலிலிருந்து நேராக வீட்டுக்கு வருவதானால், இந்நேரம் வந்திருப்பான்: இம்பாலாவில் ஏறமாட்டான்: வினோபாஜி மாதிரி நடந்துதான் வருவான் நடந்துதான் போவான்: இந்தச் சின்ன வயதிலேயே, பற்றற்ற-பற்றறுத்த நிலை ஏன்தான் ஏற்பட்டதோ? எப்படியும் வந்துவிடுவான்; வாரத்திலே, ஆறு நாட்களில் சுமக்க முடியாமல் சுமந்து வைத்திருக்கும் பாசத்தையும் அன்பையும் ஒரு வீவு நாளில் எங்கள் முன்னிலையில் கொட்டி அளக்காமற் போனல்,

45