பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

புறக்கவர்ச்சியில் பரபரப்பூட்டி ஆரவாரிக்கும் மின்மினிக் கூட்டமாகிய நவீன எழுத்தாளர்களுக்கு மத்தியில், பண்பாடு சிதையாமல், சீரிய நோக்கோடு எழுத்துப் பணி புரிந்து வரும் முதிர்ந்த எழுத்தாளர், திரு. பூவை. எஸ். ஆறுமுகம் ஆவார். அவர்தம் சிறப்பினைத் தமிழ் கூறு நல்லுலகம் மிகுதியாய் அறியும். கிராமிய மணமும் வளமும் அவரது எழுத்துக்களில் சிறக்கக் காணலாம்.

அவர்தம் பல்வகைப் படைப்புக்களையும் தொடர்ந்து எங்கள் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுப் பெருமை பெற விழைகின்றாேம்.

இந்நாவலை வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியர் திரு. பூவை எஸ். ஆறுமுகம் அவர்கட்கும், இதனை அச்சேற்றி உதவிய திரு. எம். ஆர். பிரிண்ட்டர்ஸ் அவர்கட்கும், எழிலுற முகப்போவியம் படைத்த ஒவியர் திரு. ஆனந்தன் அவர்கட்கும் எங்கள் நன்றி உரியதாகும்.

குறிஞ்சிப்பாடி
19-6-1982
மணியம் பதிப்பகத்தார்