பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"சரி, சரி வாங்க, சாப்பிடலாம். இட்டிலியெல்லாம் இந்நேரத்துக்குக் காஞ்க கருவாடாய்ப் போயிருக்கும்!” என்றாள் ரஞ்சனி.

“கருவாடுனாலுத்தான் எனக்கு ரொம்பப்பிடிக்குமே!’ என்றார் ரஞ்சித்.

‘இட்லிதான் அங்கே இருக்கும்; இஷ்டம்னு வாங்க, அத்தான்!”

‘உன் இஷ்டம் தானே என் பாக்கியம், ரஞ்!’

அத்தான் வசனம் பேசுவதைக் கை கொட்டி ரசித்து உற்சாகப்படுத்தலாமென்று அவள் எண்ணிக் கொண்டிருக் கையில், முகப்பிலிருந்து ஹாலேக் கடந்து இரண்டாம் கட்டின் வழியாகச் சாப்பாட்டுக் கூடத்துக்கு வழி அமைத்த நிலைப்படியை அலங்கரித்த பூந்திரை கண்களின் சிமிட்டலாக அசைவதைக் கண்டு கொண்ட ரஞ்சினி, யாரோ அந்நியர்கள் வருகிரு.ர்கள் என்பதை உணர்ந்து, அத்தானை உஷார்ப்படுத்தக் கைகளால் ஜாடை காட்டினாள்.

அதற்குள்

படாதிபதி அங்கே தோன்றிவிட்டார்.

ரஞ்சனி கல் தூணுக்குப் பின்னே ஒதுங்கினாள், முன் அறிவிப்பின்றித் திரையை விலக்கியவர் மகேஷாக இருக்க முடியாதென்று அவள் நம்பினாள்.நினைத்தது சரி;மகேஷால்லை முகப்பிலிருந்தே அட்டகாசமாகக் குரலெழுப்பிக் கொண்டல்லவா கம்பீரமாக வந்து நிற்பார்! இந்தக் கைலாசத்துக்குத் தெரித்த இங்கிதம் இவ்வளவுதான்!-ஊம்:

ரஞ்சித் சுதாரித்துக் கொண்டார். ‘புறப்பட்டாச் சுங்களா, கைலாசம்?” என்று வினவினர்.

‘ஐயா கையிலே சொல்லிக்கினு கிளம்பலாம்னுதான், வெளியிலே காத்திருந்தேன். நீங்க வராததினலே, நானே

60