"கச்சிதமாய்ச் சொல்லிட்டீங்களே? ஆமாங்க! என்னோட படத்துக் கதாநாயகி குமாரி சாருகேசி விருந்து கொடுத்தாங்க!”
"அப்படியா? விருந்து கொடுத்தது சரி; ஆனா, பில் யார் கொடுத்தது?"
"பில் நான்தானுங்களே கொடுத்தாகணும்?”
ரஞ்சனிக்கு எரிச்சலான எரிச்சல்.
குமரிப் பெண்ணைப் பசி புரட்டி எடுக்கிறது.
"கோழி விருந்துக்கு நீங்க உங்க புது மனைவி கோகிலத் தையும் அழைச்சிட்டுப் போயிருக்க வேணும், கைலாஷ்!”
பாபு வேடிக்கை பார்க்கத் தயாரானான்.
"ஸார், எல்லாக் கதையும் தெரிஞ்சிருந்தும், என்னே இப்படி மடக்கறிங்களே? இந்தக் கோகிலம் நான் மன சொப்பிக் கொடுக்கக் கூடிய விருந்தை ஏற்கக் கூடிய அளவுக்கு எனக்கு உண்மையுள்ளவளாக இருந்திருந்தா, நான் ஏனுங்க குமாரி சாருகேசியோட துணையை விருந்துக்கு நாடப் போறேன்? என் முதல் பெண்டாட்டி நீலாட்சி யோடே என்னோட மன நிம்மதியும் காலமாயிடுச்சுதுங்க; அவ புண்யவதி; அவளுக்குச் சாகத் தெரிஞ்சிட்டுது:எனக்குத் தெரியல்லே: நான் பாவி!...”கைலாசத்தின் குரலில் சோகம் ஓங்கியிருந்தது.
ரஞ்சித்தின் மனிதாபிமான உணர்ச்சிகள் கைலாசத்திற்காக அனுதாபப்பட்டன; கண்ணீரை மறைத்துக் கொள்ளத் தலையை இறக்கிக் கொண்டார்.
ரஞ்சனி உருக்குலைந்தாள்: உருகினாள்; தவித்தாள்.
‘பாவம்'- இது பாபு.
62