பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலக்கியிருந்த காப்பியைக் கணவரிடம் ஜாக்கிரதையாகவே நீட்டினாள்.

மண்வியின் எச்சரிக்கைப் பண்பு ரஞ்சித்தின் கண்களில் கண்ணிரை வரவழைத்தது. மனம் அடைந்த ஆதங்கத்தில் காப்பி வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகக் ககந்து தொலைத்தது. ‘ரஞ்,” என்று துணையை அழைத்து, அவள் காலை வேளை இட்டிலிகளைச் சாப்பிட்ட விவரத்தைக் கேட் டறிய முற்பட்ட போது, தான் நந்தினி, பாபு சகிதம் சாப்பீட்டு விட்டதாகப் பொய் சோன்னதை அவள் தம் பாமல் போகவே, கடைசியில் அவள் சாப்பிடவில்லே என்னும் உண்மையை அறிந்து வருத்தி, அவளுக்காக வருந்தி, அவளோடு உடன் சென்று அவளைச் சாப்பிட வைத்த பிற்பாடுதான், நல்ல மூச்சுவிடலாளுர்; அவன் குடித்த எச்சில் காப்பியில் அவருக்கும் துளி கிடைத்ததில் அவர் புதிதான அமைதியை அடைந்தார்: அந்த அமைதிகூட இனித்தது.

ரஞ்சனி விருந்து தயாரிப்பதில் விசேஷமான அக்கறை யோடும், தனியான ஆர்வத்தோடும் முன்னிந்திருக்கின்றாள். ரதி ஏதாகிலும் ‘ஒச்சம் சொல்லிவிடக் கூடாது அல்லவா? கடைசிப்பட்சமாக, அவியல் கறியிலாவது தேங்காய் எண் ணெயைத் தாளிப்பதற்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும், அன்றைக்கு எர்ணுகுளத்தில் ஹோட்டல் இன்டர் நேஷனலில் வைத்திருந்த அவியலைச் சுவைத்தும் ருசித்தும் மகேஷூடன் சேர்ந்துகொண்டு போட்டி போட்டுச் சாப்பிட்டதை இப்பொழுது அவள் நினைத்துப் பார்க்க வேண்டிய வள் ஆனாள். .

வெய்யவில் வினாடிகள் ஊர்கின்றன.

ரஞ்சனி இல்லாமல், வரவேற்புக் கூடம் வெறிச் சோடிக் கிடந்தது.

77