விதிக்கு நடிக்கத்தான் தெரியும்; நடக்கவும் தெரிந்திருக்கிறது!...
அப்போது:
அங்கே
பாபு மாத்திரம் நிற்கவில்லை.
ரஞ்சனியும் நின்றாள்!...
"அப்பா!" என்றான் பாபு.
ரஞ்சித் மட்டிலும் திரும்பவில்லை.
மகேஷும் திரும்பினார்! ...
ரஞ்சனியின் இதயத்தில் வீழ்ந்த நெருப்பு அவளுடைய காற்பாதங்களில் சுட்டுப் பொசுக்கிவிட்டது போலவே துடித்தாள்; துவண்டாள்; தடுமாறினாள்; தத்தளித்தாள் :
ரஞ்சித்தின் சிவந்திருந்த விழிகள் மேலும் சிவந்தன!
விருந்தாளியாக வீடு தேடி வந்திருந்த மகேஷை சூட்சுமமான ஆத்திரத்தோடு விநயமாக முறைத்து வெறித்துப் பார்த்துக்கொண்டே, "அப்பா!" என்று அன்பின் பாசம் முழக்கம் செய்திட அழைத்து, ரஞ்சித்தின் கைகளைப் பிடித்துக்கொண்டான் சிறுவன் பாபு மணிப்பயல் பாபு!
மகேஷைப் பேய் அடித்ததா?-அவருக்குச் சொந்த பந்தம் பூண்ட மனம் ‘பாபு: 'பாபு!’ என்று வெகு ரகசியமாகக் கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறது!-மனக் குரங்கின் கண்களில் ரத்தம் உருகிக் கசிந்து கரைந்து கொண்டே இருக்கிறது!-பாவம்!
எங்கேயோ பூவரசம்பூ பூத்திருக்கிறது
94