பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"மிஸ்டர் மகேஷ்!"

"ஸார்"

"பாபுவோட-எங்க பாபுவோட நீங்க என்னமோ பேசவேணும்னு சொன்னீங்க இல்லீங்களா?’’

‘‘...... உம்!"

"பேசறதுதானே?”

"........"

“என்ன, மெளனம் சாதிக்கிறீங்க, மகேஷ்?’’

"ஸாரே!"

‘பேசுங்க, மகேஷ். பாபுவோடே பேசுங்க!

"...................."

"உம்!"

"வந்து......”

“அதுதான் வந்திட்டீங்களே?”

“ஸார், ரஞ்சித் ஸார்!”

"ரஞ்சித் செத்துப் போயிடல்லே: செத்துப் போயிடவும் மாட்டான்! எங்க பாபுவோடே - நம்ம பாபுவோடே -உங்க பாபுவோடே பேசுறதுக்கு ஏன் இப்படிப் பயந்து சாகறீங்களாம்?-பாபுவோடே பேசுங்க, மகேஷ்!”

ஆடு திருடிய கள்ளனைப்போலே, திருதிருவென்று விழிக்கிறார் மகேஷ் சுடுநீர்ச் சரம் நீள்கிறது; சுடுகிறது.

ரஞ்சனி கால் பாவி, கால் பரப்பி, கால் பதித்து நின்ற உயர்ரகப் பளிங்குக் கல்தரை, அப்போது தூக்குமேடையாக உருவெடுத்து விட்டிருக்க முடியாதுதான்.

95