பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாபு சிரிக்கிறான்; சிரிக்கிறான்; சிரித்துக்கொண்டேயிருக்கிறான்!

பாபுதான் விதியா?.

இல்லை....

விதிதான் பாபுவோ?

மெளனத் தீ கொழுந்துவிட்டெரிந்தது.

மெளனத்தின் பிண்டமென நிலைகுலைந்தும் நிலை கலங்கியும் நின்ற மகேஷின் உள்ளத்தில் ஏக்கமும் ஏமாற்றமும் பிய்த்துப் பிடுங்கித் தீர்த்தன; நரகவேதனை அவரைச் சித்திரவதை செய்தது.

"‘பாபுவோட பேசலீங்களா, மிஸ்டர் மகேஷ்?’ என்றார் பாங்கர்.

"ஊம், பேசவேண்டியதையெல்லாம் பேசிடுங்களேன், மிஸ்டர் மகேஷ்! பாங்கரின் பாங்கியான ரஞ்சனி.

"ஓ, பேசலாமே, ஸாரே!" என்று அனுமதி அளித்த வகை, மகேஷ் நின்ற இடத்தை அண்டினான் பாபு விதியாகவே அண்டினான் பாபு

“ஊஹும், நான் பேசல்லே, பாபுவோடே நான் பேசல்லீங்க விம்மினார் மகேஷ், சட்டைப்பையின் உட் புறத்தில் அஞ்ஞாத வாசம் செய்த அந்தச் சின்னஞ்சிறிய துண்டுக் கடிதத்தை வெளியே எடுத்தவர். மறுபடி அதைச் சட்டையின் பைக்குள்ளாகவே மறைத்துத் திணித்தார்.

ஆ!....

“மிஸ்டர் மகேஷ், உங்களை எனக்குத் தெரியாதா?” சிரித்தார் ரஞ்சித்.

96