பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலை நடுங்கினார் மகேஷ் இடப்புறத்தில் நின்று விடாமல் ஒடிக் கொண்டிருந்த இருதயத்தை அழுத்தித் தேய்த்துக் கொண்டார் “மிஸ்டர் ரஞ்சித்!" விம்மினார்.

ரஞ்சனியின் கண்கள் அவளது காற் பெருவிரல்களையே இன்னமும் பார்த்த வண்ணம் இருக்கின்றன. உள்ளத்தின் உள்ளம் '144' போட்டது; ஊகூம், அழக் கூடாது; இந் நேரத்தில், அழவே கூடாது!-ஆனால், அவளது எழில் விழிகள் அழத் துடித்தன; சதுரங்கம ஆடிய கண்ணீர்த் திரளில், பொல்லாத அந்த அந்திமாலைப் பொழுது இப்போது ஊடும் பாவுமாகப் படம் வேறு காட்டித் தொலைக்கிறது!- தாயே, மாங்காட்டுக் காமாட்சி!... என்னை ஏன் இப்படி நித்த நித்தம் உயிர் செத்துச் செத்து, உயிர் பிழைக்கச் செய்கிறே?... அன்றைக்கே நான் செத்து மடிஞ்சிருக்கப்படாதா?’-மனம் அழுதது; புலம்பியது: “ஆமாங்க, அத்தான். நான் புண்ணியவதிதாங்க; பாவப் பட்ட இந்தப் பெண் ஜென்மத்துக்கு உங்களோட எல்லையில்லாத அன்பின் மூலம், ஈடுஎடுப்பில்லாத உங்களோட கருணையின் மூலம் எனக்குப் பாவவிமோசனம் கிடைக்கிறத்துக்குப் பூர்வ ஜென்மத்திலே புண்ணியம் செஞ்சிருந்த நான், வாஸ்தவத்திலேயே புண்ணியவதியே தானுங்க, அத்தான்!’-பத்து வருஷத்துக்குமுறல் ஓயாதா? ரஞ்சனி, ‘அ. . த்...தான்! “என்று கதறினாள்!

மின்னாமல் முழங்காமல் இடி. விழுந்து விட்டமாதிரி, பதறினார் ரஞ்சித்: "ரஞ்...!" என்று அலறினார்; ஒடினார்.

"அம்மா!... அம்மா!"

பயத்துடன் தாயைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கவலையுடன் செருமினான் பாபு.

குற்றம் பார்க்கில், சுற்றம் இல்லை!

மகேஷ் ஒதுங்கியும் ஒதுக்கமாகவும் நின்றார்.

97