பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

99



“நான் இந்த அவலக் காட்சிகளையெல்லாம் கண்கொண்டு கண்டு சகித்துக்கொண்டு உயிர்தரித்திருக்க மாட்டேன்!”என்று கதறினார் பூபேந்திர பூபதி. துயரம் அவரது உடலை துரும்பாக்கிற்று.

முதல் மந்திரி அழகண்ணல் புழுவாய்த் துடித்தார்.“மன்னர் பெருந்தகைக்குத் தெரியாததல்ல. நம் நாடு இன்று இருக்கக் கூடிய அபாயகரமான கட்டத்திலே, நீங்கள் இப்படி மனம் சோர்ந்து தளர்ந்தால், பிறகு, நாங்களெல்லாம் என்ன செய்வது?... எங்களைத் தேற்றுவார் யார்? எங்கள் அன்னையை இழந்த ஆறாத் துன்பத்தை மறந்து ஆறுதல் புகட்டத்தான் இளையராஜா அவதரித்திருக்கிறார் என்றுதான் நானும் மற்றவர்களும் மனம் தேறி வர முயலுகிறோம். மேலும்... எதிரி நாட்டானுக்குக் கொண்டாட்டமான நேரம் இது. நம் பகைவனுடைய நாட்டு ஒற்றர்கள் வேறு இப்பகுதிகளிலே நடமாடி வருவதாக ஐயப்படுவதாகவும் யாரோ ஒரு பெண்ணை அவ்வாறு சந்தேகித்து இங்கு சந்நிதானத்தில் அவளைக் கொண்டுவர எத்தனித்த போதில், அரசவையின் பேரிடிச் செய்தி அவனைக் கதிகலங்கச் செய்யவே, அவளை மறந்து இங்கு ஓடிவந்து விட்டதாகவும் நம் படைத் தலைவன் வருந்தினான்.

நீங்கள் மனம் தெளியக் கண்டால்தானே எனக்கு அரசாங்கக் காரியங்களில் மனம் செலுத்தி, நாட்டின் பாதுகாப்பு, படைதிரட்டல் போன்ற பணிகளைச் செவ்வனே ஆற்ற முடியும்?வரும் பெளர்ணமியன்று நம் பாதாளக் கோயிலுக்குப்பூஜை நடத்தி அண்டவெளிக் காளியை அருள் பாலிக்கும்படி வேண்டப் போகிறோம்..!”என்று உணர்ச்சிகள் துடிதுடிக்க பேசி முடித்தார்.