462 இளவரசி வாழ்க
மலைத்து விட்டார் நாடாளும் நல்லவர்.
அதிர்ந்து போனார் அறிவுக்கு விருந்து வைப்பவர்.
புரட்சியின் கனவாக அமைதியான முறுவலை அழகு சிந்த வெளிக் காட்டியபடி அப்படியே நின்றாள் இளவரசி.
“மகளே!”
“அப்பா!”
“அப்படியென்றால், வேழ நாட்டான் மீது படையெடுப்பதை நீ விரும்பவில்லையா?
“அது உங்கள் சொந்த விருப்பு வெறுப்பைப் பொறுத்த ராஜரீக விஷயம்-ராஜீய விஷயம்! அதில் குறுக்கிட நான் யார்?”
“நீ என் அருமைச் செல்வி!”
“இது நம் சொந்தபந்தம்!.”
“ஓஹோ!”
மன்னர் தீர்மானமான ஒரு பார்வையுடன் அமைச்சர் தலைவரின் திசைப் பக்கம் திரும்பினார். “தலைமை அமைச்சர் அவர்களே!. விதி இப்போது என் மகளின் உருவிலே விளையாடப் போகிறது ... ஆகவே, முன் நடந்த மந்திராலோசனையின் திட்டத்தைச் செயற்படுத்துவதில் முழுமூச்சுடன் இறங்குங்கள். என் மன அமைதிக்கும் இது நல்லதொரு திருப்பமாக அமையட்டும்!” என்று வீறுடன் மொழிந்தார்.
மீண்டும் நகைப்பொலி உதிர்த்துவிட்டு, பட்டுத் தாவணியைச் சமன் செய்தபடி அங்கிருந்து புறப்பட்டாள் இளவரசி கன்யாகுமரி!